Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... பரமக்குடியில் மாற்றுத் திருகோலத்தில் சுந்தரராஜ பெருமாள், தாயார் அருள்பாலிப்பு பரமக்குடியில் மாற்றுத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி கல்யாண ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்: ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
சீர்காழி கல்யாண ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்: ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2023
07:04

மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருநகரி அமிர்தவல்லி தாயார் சமேத கல்யாண ரெங்கநாதர் கோவில் தெப்ப உற்சவம், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரியில் 108 திவ்யதேசங்களில் 37வது தலமான அருள்மிகு அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வார்,குரசேகர ஆழ்வார் ஆகியோரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும் திருமங்கை ஆழ்வார் அவதார ஸ்தலமாக கருதப்படும் இக்கோவிலில் பங்குனி பெருவிழா உற்சவம் கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இவ்விழாவின் முக்கிய திருவிழாவான பன்னிரண்டாம் நாள் திருவிழா  இக்கோயிலின் தீர்த்த குளமான க்கிலாதினி புஷ்கரணியில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கோயிலில் அருள்மிகு அமிர்தவள்ளித் தாயார் சமேத கல்யாண ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள், தாயார், திருமங்கையாழ்வார் மற்றும் ராமானுஜர் பல்லக்கில் க்கிலாதினி புஷ்கரணிக்கு வந்து அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினர். இதையடுத்து தெப்பம் மூன்று முறை தீர்த்தக்குளத்தை வலம் வந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாத பெருமாளை வழிபாடு செய்து தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar