Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; ... அலகுமலை முத்துக்குமார பாலகண்டாயுதபாணி கோவிலில் சித்திரை திருவிழா அலகுமலை முத்துக்குமார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் விசு கனி தரிசனம்: பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கல்
எழுத்தின் அளவு:
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் விசு கனி தரிசனம்: பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கல்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2023
11:04

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சித்திரை தமிழ் மாத வருடப்பிறப்பை முன்னிட்டு விசு கனி தரிசன விழா நடந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலிலும் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். நேற்று அதிகாலை 4:30 மணியளவில் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா சங்கரன், சங்கரி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அஷ்டாபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள பஜனை மண்டபத்தில் உற்ஸவர் ஐயப்பனின் முன்பு முகக்கண்ணாடி வைக்கப்பட்டு மா, பலா, வாழை, திராட்சை, பேரிச்சை மற்றும் அனைத்து வகையான காய்கறிகள் உள்ளிட்டவைகள் 108 தட்டுகளில் குவியிலாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அதிகாலை முதல் மாலை வரை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் தலைமை குருசாமி மோகன் வெற்றிலை, பாக்கு, பழம், ஒரு ரூ. நாணயம் ஆகிவற்றை கை நீட்ட பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கினார்.

மூன்று வேளையும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர். தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி பக்தர்களின் சபரிமலை யாத்திரை புறப்பாடு நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar