Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காமாட்சி அம்மன் கோவில் பங்குனி ... காரைக்காலில் மாரியம்மன் வீதியுலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதுாரில் மூடி கிடக்கும் ராமானுஜர் மணிமண்டபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2023
05:04

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் உற்சவ விழா துவங்கியுள்ள நிலையில், அவரது நினைவாக கட்டப்பட்ட மணிமண்டபம் பராமரிப்பின்றி மூடிக் கிடப்பதால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர், வைணவ மகான் ராமானுஜர். ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு அவதார விழா, 2017ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இதை சிறப்பிக்கும் வகையில், ராமானுஜருக்கு ஸ்ரீபெரும்புதுாரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என, 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே ஜீயர் தோப்பு பகுதியில் 2.79 ஏக்கர் இடத்தில் 7.24 கோடி ரூபாய் மதிப்பில் ராமானுஜர் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. மேலும், இங்கு வேதபாட சாலை, மாணவர் தங்கும் விடுதி, அன்னதானக் கூடம், ராமானுஜர் வரலாற்று தகவல் மையம், நுாலகம், ராமானுஜர் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படத்தை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வசதிகளுடன் கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, 2021, பிப்., 26ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி, ராமானுஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இந்த மணிமண்டபத்தை பராமரிக்க கவனம் செலுத்தவில்லை. இதனால், மணிமண்டபம் பராமரிப்பின்றி மூடிக் கிடக்கிறது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜரின் 1006ம் ஆண்டு அவதார உற்சவ விழா ஏப்.16ல் துவங்கியது. இந்த விழாவுக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஸ்ரீபெரும்புதுார் வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுாரில் பராமரிப்பில்லாமல் மூடிக் கிடக்கும் ராமானுஜர் மணிமண்டபத்தை பார்க்கும் பக்தர்கள் வேதனையடைகின்றனர். மணிமண்டபத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள், கோரிக்கை வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar