Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் 2,000 கோவில்களில் ஒருகால ... காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா : குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா : குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2023
03:04

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா திருகம்பம் நடுதல் நிகழ்வுடன் துவங்கியது.

தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாகும். திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டும் இன்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வர். நேற்று முன்தினம் சுவாமி வாக்கின் படி திருக்கம்பம் வீரபாண்டி கோயில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து திருக்கம்பம் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயில் கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து பக்தர்கள் சூழ வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திருகம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, செயலாளர் பாலசுப்பிரமணியன், கணக்காளர் பழனியப்பன், பேரூராட்சி தலைவர் கீதா, பேரூராட்சி செயலாளர் ஆறுமுகநாயினார், மண்டகப்படிதார்கள், முறைதாரர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மே 9ல் சுவாமி கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு பவனி வருதல், மே 10, 11 சுவாமி முத்துப்பல்லக்கு, புஷ்ப பல்லக்கில் புறப்பாடும், 12ல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும், 16 ஊர் பொங்கல் நிகழ்வும் நடக்கிறது. கோயில் அலுவலர்கள் கூறுகையில், ‘தீச்சட்டி, காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் முதல் 6 வரை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கப்பிரதட்சனம் செய்தல், ஆயிரம் கண் பானை நேர்த்திக்கடன் செலுத்தலாம்.’, என்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar