Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் இரும்பு ... வேதை கோவில்களில் சிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோவிலில் கலர் பெயின்ட் பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 செப்
2012
10:09

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மூன்றாம் பிரகாரத்தை சித்திரப் பிரகாரமாக மாற்றுவதற்காக, தூண்களில் கலர் பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம், 75 ஆண்டுகளுக்கு முன் வண்ணச்சித்திரங்கள் அடங்கிய பிரகாரமாக விளங்கியது. நாளடைவில் பிரகாரச்சுவர் மற்றும் தூண்களில் இருந்த சித்திரங்கள் புதுப்பிக்கப்படாமல், சுண்ணாம்பு மற்றும் காவி மட்டும் அடிக்கப்பட்டது. இதனால், தூண்களுக்கு இடையில் மேல் பகுதியில் இருந்த சுண்ணாம்பு சுதை சிற்பங்கள் சிதிலமடைந்து வந்தன. மேலும், தூண்களுக்கும் ஒரே கலர் பெயின்ட் அடிக்கப்பட்டதால், பிரகாரத்தில் அமைந்துள்ள சிற்ப வேலைப்பாடுகள், பார்ப்பவர்களின் கண்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மூன்றாம் பிரகாரத்தை முன் இருந்தது போல் சித்திரப் பிரகாரமாக மாற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தற்போது, பிரகாரத்தில் உள்ள தூண்கள் மற்றும் சிற்பங்களுக்கு, பல வண்ணத்தில் பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, மூன்றாம் பிரகாரத்தில் செல்பவர்கள், 10 நிமிடத்தில் சுற்றி வந்து விடுகின்றனர். வண்ணம் பூசும் பணிகள் முடிந்ததும், பிரகாரத்தில் உள்ள புராண வரலாற்றுச் சித்திரங்கள், சுதை சிற்பங்களை பார்த்து ரசித்து சுற்றிவர அதிக நேரம் ஆகும். மூன்றாம் பிரகாரத்தை தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபம், நவசக்தி மண்டபத்திலும், பல வண்ணத்தில் பெயின்ட் அடிக்கும் பணி துவங்கப்படவுள்ளது.

2007 விளக்கு பூஜை: ராமநாதசுவாமி கோயிலில் உலக நன்மைக்காக விவேகானந்த கேந்திரம் சார்பில் 2007 விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று மாலை ஏராளமான பெண்கள் நான்குரத வீதியில் ஊர்வலமாக வந்து ராமநாதசுவாமியை தரிசனம் செய்தனர். கோயில் மூன்றாம் பிரகாரத்தில் விவேகானந்த கேந்திரத்தின் மூத்த தொண்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விளக்கு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar