Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் புதுப்பிக்க பள்ளம் தோண்டிய ... குண்டுசெட்டிபாளையத்தில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெய்வ சக்தியில் யானைகளை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 செப்
2012
10:09

ஊட்டி: குடியிருப்பு பகுதிக்குள் புகும் யானை­களை விர­ட்ட பட்டாசு வெடித்து, பயமுறுத்தி விரட்டும் நிலை ஒருபுறமிருக்க, கோவிலில் சிறப்பு பூஜை செய்து "தெய்வ சக்தியில் யானைகளை கட்டுப்படுத்த எப்பநாடு கிராம மக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஊட்டி அருகே எப்பநாடு கிராமத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன; தேயிலை, வாழை மற்றும் மலைக் காய்கறி பயிராகும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. சில நாட்களாக எப்பநாடு அருகேயுள்ள வனப்பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட யானைகள், எப்பநாடு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டு, பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுக்க, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எப்பநாடு மக்கள் ஆணைகட்டி வனப்பகுதியில் உள்ள ஆணிக்கல் மாரியம்மன் கோவிலுக்கு, தங்களின் பாரம்பரிய உடையணிந்து, இசைக் கருவிகள் மீட்டு, ஊர்வலமாக சென்று சிறப்பு பூஜை செய்தனர். ஊர் தலைவர் லிங்கன் கூறுகையில், ""விவசாய நிலங்களில் யானைகள் சில நாட்களாக முகாமிட்டு, பயிர்களை சேதம் செய்கின்றன; யானைகளை விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டாலும், அவை வனப்பகுதிக்குள் செல்லாமல் உள்ளன. யானைகளிடம் இருந்து விவசாய நிலங்களை காப்பாற்றவும், யானைக்கும், யானைகளால் பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதை மையப்படுத்தி சிறப்பு பூஜை செய்கிறோம்; தெய்வ சக்திக்கு யானைகள் கட்டுப்பட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என நம்புகிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: ருத்ரபிரயாக், கேதார்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. நேற்று ஏற்பட்ட நிலச்சரிவால் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமி மடத்தில் நேற்று ஆடி சுவாதியை முன்னிட்டு சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar