பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழா : மே 3ல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2023 06:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், விசாலாட்சி அம்பிகா சமய சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது. இக்கோயிலில் ஏப்., 24 கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கி, தினமும் பிரியா விடை யுடன் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பிகா பஞ்சமூர்த்திகளுடன் வீதி வலம் வருகின்றனர். ஏப்., 29 ரிஷப வாகனத்திலும், ஏப்., 30 காலை நடராஜர் புறப்பாடு, இரவு 7:00 மணிக்கு சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் வலம் வந்து திக் விஜயம் நடக்கிறது. தொடர்ந்து மே 1 தபசு திருக்கோலம், மறுநாள் காலை 11:00-12:00 மணிக்கு திருக்கல்யாணம், மே 3 சித்திரை தேரோட்டம் நடக்க உள்ளது.