Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக ... மேலுார் நொண்டிச்சாமி கோயில் திருவிழா : பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன் மேலுார் நொண்டிச்சாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் விசாலாட்சி - சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம்: நாளை சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் விசாலாட்சி - சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம்: நாளை சித்திரை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

02 மே
2023
04:05

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 24 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. தினமும் சுவாமி, அம்பாள் உட்பட பஞ்சமூர்த்திகள் திருவீதி வலம் வருகின்றனர். ஏப்., 30 இரவு திக் விஜயம் நடந்து, மே 1 கமல வாகனத்தில் விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து இன்று காலை 10:30 மணிக்கு சந்திரசேகர சுவாமி மாப்பிள்ளை திருக்கோலத்தில் ரத வீதிகளில் உலா வந்தார். தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் சுவாமி, அம்பாள் வீற்றிருந்தனர். அப்போது சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, பெருமாள் முன்னிலையில், விசாலாட்சி அம்பிக்கைக்கும், சந்திர சேகர சுவாமிக்கும் காலை 11:45 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தை கோயிலில் புதுப்பித்து அணிந்து கொண்டனர். தொடர்ந்து மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனையொட்டி பரமக்குடி சுந்தரராஜ பவனத்தில் அன்னதான குழுவினரால் காலை 12:00 மணி தொடங்கி மாலை வரை பக்தர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. நாளை சித்திரை தேரோட்டம் நடைபெறு்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ‘‘காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar