Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காளஹஸ்தி லட்சுமி நரசிம்மசுவாமி ... சிவகாசி சித்திரை திருவிழாவில் பிரமாண்ட சாமி சிலைகள் ஊர்வலம் சிவகாசி சித்திரை திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்கக் குதிரை ஜொலிக்க.. பக்தர்கள் வெள்ளத்தில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
தங்கக் குதிரை ஜொலிக்க.. பக்தர்கள் வெள்ளத்தில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பதிவு செய்த நாள்

05 மே
2023
06:05

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி காலை நடைபெற்றது. அழகர் பச்சை பட்டு உடுத்தி, ஆண்டாள் சூடிய பரிவட்டம் மாலை ஆகியவற்றுடன் பக்தர்கள் வெள்ளத்தில், ஜொலித்த தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்..

மதுரையில் வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றாலும் மிகவும் பிரசித்தி பெற்றவை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் தான். இன்று முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. அழகர் பச்சை பட்டு உடுத்தி, ஆண்டாள் சூடிய பரிவட்டம் மாலை ஆகியவற்றுடன் பக்தர்கள் வெள்ளத்தில், ஜொலித்த தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் வைகை ஆற்றில் இறங்கியதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீச்சியடித்து சாமி தரிசனம் செய்தனர். நாளை (மே.6) ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை 6ம் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்பட்டு, பின்னர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் வைபவமும், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 7 ம்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சியளிக்கிறார்.  பிற்பகல் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். 8 ம்தேதி அழகர் மலைக்கு பூப்பலாக்கில் திரும்புதல் வைபவம் நடைபெறுகிறது. 9ம் தேதி காலை 11.30 மணிக்குள் அழகர் மலை சேருவார். 10ம் தேதி அழகர் கோவிலில் உற்சவ சாற்று முறை நடைபெறுகிறது.

கள்ளழகருக்கு எதிர் சேவை: மதுரை வைகை ஆற்றி்ல் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, முன்னதாக அழகர்மலையில் இருந்து புறப்பட்டு நேற்று தல்லாகுளம் பகுதி வந்த அழகரை வரவேற்கும் விதமாக எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் சர்க்கரை கிண்ணத்தில் நெய் தீபம் ஏற்றி கள்ளழகருக்கு வரவேற்பு அளித்தனர். வராரு..வராரு..அழகர் வராரு பாடல் எங்கும் எதிரொலிக்க மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar