Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கொடையில் சத்ய சாய்பாபாவின் அன்னை ... வாடிப்பட்டி மாரியம்மன் கோயில் உற்ஸவ விழா வாடிப்பட்டி மாரியம்மன் கோயில் உற்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரத்தில் சேதமடைந்த சாமி சிலைகள், பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
மடப்புரத்தில் சேதமடைந்த சாமி சிலைகள், பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

06 மே
2023
08:05

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி சிலைகள் பலவும் சேதமடைந்து மூளியாக காட்சியளிப்பதால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கேட்டவரம் தருபவள், தவறு செய்தவர்களை தண்டிப்பாள் என்பதால் பக்தர்கள் பலரும் நம்பிக்கையுடன் வந்து அம்மனுக்கு எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டி செல்கின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு மடப்புரம் கோயிலில் திருப்பணி வேலைகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சாமி சிலைகள் உள்ளிட்ட பலவும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவைகள் சேதமடைந்துள்ளன. மடப்புரம் அம்மனின் இருபுறமும் உள்ள பெண் சிலைகள் சேதமடைந்த நிலையில் அதில் சேலைகளை மறைத்து சுற்றி வைத்துள்ளனர். மடப்புரம் என்றாலே அம்மனின் மேலே பிரம்மாண்டமான குதிரை சிலைதான், அதுவும் சேதமடைந்துள்ள நிலையில் மூளியாக உள்ள சிலைகளால் பக்தர்கள் வேதனையடைகின்றனர். பக்தர்கள் தரப்பில் கூறுகையில்: மடப்புரம் கோயிலில் ஒன்பது உண்டியல்கள் மூலம் காணிக்கையாக 40 லட்ச ரூபாய்க்கு குறையாமல் கிடைக்கிறது. தங்கம் சுமார் 500 கிராம் காணிக்கையாக பக்தர் வருடத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் உள்ள இந்த கோயிலில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் செய்வதில்லை. பக்தர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தருவதில்லை. அம்மன் சிலை உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ள நிலையில் அவற்றை சரி செய்ய நிர்வாகத்தினர் எந்த வேலையும் செய்வதில்லை. உண்டியல் காணிக்கையை எண்ணுவதற்கு மட்டும் துணை ஆணையர், இணை ஆணையர் என அனைவரும் வந்து விடுகின்றனர். ஆனால் கோயிலுக்கு தேவையானதை செய்வதில்லை என குற்றம் சாட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar