பதிவு செய்த நாள்
09
மே
2023
10:05
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவங்கி, மே 16 வரை நடக்கிறது.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக 148 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருவிழா நாட்களில் குவரத்து வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவங்கி, மே 16 வரை நடக்கிறது. திருவிழாவில் ஒரு மணி நேரத்திற்கு 4162 பக்தர்கள் வீதம் தினமும் ஒரு லட்சம் ன பங்கேற்பர் என மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு போக்கவரத்து கழகம் சார்பில் 148 பஸ்கள் திருவிழாவிற்காக இயக்கப்பட உள்ளன. ஆண்டிபட்டி, தேனி, டி, பெரியகுளம் பகுதிகளில் இருந்து வீரபாண்டி வடக்கு பஸ் ஸ்டாண்டிற்கும், கம்பம், லோயர்கேம்ப் குமுளி, கேரளாவில் இருந்து வரும் பஸ்கள் மேற்கு பகுதி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி பக்தர்களை இறக்கி விட ஏற்பாடு ய்யப்பட்டு உள்ளன. வீரபாண்டியில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1500 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்; எஸ்.பி., பிரவீன்உமேஷ்டோங்கரே வீரபாண்டியில் நேற்று ஆய்வு செய்து கூறியிருப்பதாவது: தேனியில் இருந்து உத்தமபாளையம் ல்லும் பஸ், வாகனங்கள் அனைத்தும் உப்புக்கோட்டை விலக்கு முன் திருப்பப்பட்டு மாற்று வழியாக உப்புக்கோட்டை, கூழையனுார், குச்சனுார், மார்க்கையன்கோட்டை, சின்னமனுார் வழியாக உத்தமபாளையம் சென்றடைய ண்டும். அதேபோல் சின்னமனுாரில் இருந்து னிவரும் வெளியூர்களுக்கு ல்லும் வாகனங்கள் உப்பார்பட்டி விலக்கு முன் திருப்பிவிடப்பட்டு மாற்று வழியாக தப்புக்குண்டு, தாடிச்சேரி, பாலகிருஷ்ணாபுரம், கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதுார் வழியாக தேனி வந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். இந்த மாற்றம் இன்று (மே 9) காலை 6:00 மணி முதல் திருவிழா முடியும் 6 நள்ளிரவு 12:00 மணி வரை அமலில் இருக்கும் என்றார்.