பழநியில் அக்னி நட்சத்திர விழா துவக்கம்; சீதகும்பம் வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2023 10:05
பழநி: பழநியில் மலைக்கோயில், பெரிய நாயகி அம்மன் கோயிலில் சீதகும்பம் வைத்து பூஜை நடந்து, அக்னி நட்சத்திர விழா துவங்கியது.
பழநியில், சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்களிலும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும். நேற்று (மே.8) மலைக்கோயில் மற்றும் பெரிய நாயகி அம்மன் கோயிலில் சீதக்கும்பம் வைத்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. சித்திரை கழுவு எனும் அக்னி நட்சத்திர விழா துவங்கியது. மே.21 வரை இவ்விழா நடைபெற உள்ளது. உள்ளூர், வெளியூர், வெளிமாவட்ட பக்தர்கள் மலைக்கோயில் கிரிவலம் வந்து வழிபடுவர். இந்த நாட்களில் மலைக்கோயில் சுற்றி கிரிவலம் வரும்போது மூலிகை காற்று வீசுவதால் நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். பெண்கள் கடம்ப மலர்களைத் தலையில் சூடியும், ஆண்கள் கைகளில் வைத்தும், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மலைக்கோயிலை கிரிவலம் வர துவங்கி உள்ளனர்.