பரமக்குடி சித்திரை திருவிழா; வைகையில் கள்ளழகர் கருட, ராஜாங்க சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2023 10:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், கள்ளழகர் கருட வாகனத்திலும், ராஜாங்க திருக்கோலத்திலும் வைகை ஆற்றில் அருள்பாலித்தார்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் பெருமாள் கோயிலில், சித்திரை திருவிழா ஏப்., 30 தொடங்கி நடக்கிறது. மே 5 அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, அன்று காலை 10:00 மணி தொடங்கி குதிரை வாகனத்தில் அலங்காரமாகி இரவு வண்டியூரில் சேர்க்கையானார். மே 6 சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷி சாப விமோசனம், விடிய விடிய தசாவதார சேவை நடந்தது. மே 7 இரவு பெரிய திருவடியான கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருளினார். தொடர்ந்து இரவு ராம, கிருஷ்ண, மோகினி அவதார சேவையில் அருளினார். நேற்று இரவு கள்ளழகர் ராஜாங்க திருக்கோலத்தில் முத்து பல்லக்கில் வைகையில் வலம் வந்தார். இன்று காலை 8:00 மணிக்கு மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் வீதி வலம் வந்து மாலை 6:00 மணிக்கு மேல் கோலாகலத்துடன் திருக்கோயிலை அடைகிறார். இரவு கண்ணாடி சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.