அவிநாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா மஞ்சள் நீர் விழாவுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2023 10:05
அவிநாசி; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவு பெற்றது. அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீர் விழா முடிந்து, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சார்யார்கள் கட்டளையில் மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, நேற்று காலை மஞ்சள் நீர் விழா நடைபெற்றது.