கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2023 08:05
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 18 ல் சாட்டுதல் செய்தும், ஏப்.19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நேற்று கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. முன்னாள் அறங்காவலர் கே.ராமசாமி - ஜெயரத்தினம்மாள் குடும்பத்தினர் சார்பில் கோயில் விழா கமிட்டி உறுப்பினர் கே.ஆர்.ஜெயபாண்டியன் அன்னதானத்தை நடத்தினார். கம்பம் எம்.எல். ஏ. ராமகிருஷ்ணன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். முன்னதாக கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர்.