தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து திருச்செந்தூருக்கு 47 வது ஆண்டாக நகரத்தார் காவடி பாதயாத்திரை நேற்று புறப்பட்டது. முன்னதாக நகரப்பள்ளிக்கூடத்தில் காவடிகள் கட்டப்பட்டு காவடிக்கு சிறப்பு பூஜைகள் செய்ததை தொடர்ந்து காவடிகள் நகர்வலம் வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலை வந்தடைந்தது. நேற்று சிறப்பு பூஜைகளை தொடர்ந்து திருச்செந்தூருக்கு காவடி மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக புறப்பட்டனர். முதலாம் ஆண்டு திருச்செந்தூர் பாதயாத்திரையை தலைமையேற்று சென்ற கவிஞர் அருசோமசுந்தரன் 47 வது யாத்திரையை வாழ்த்தி வழியனுப்பி யார். நிகழ்ச்சியில் பாதயாத்திரை டிரஸ்ட் குழுவினர் காசிநாதன், தட்சிணாமூர்த்தி பங்கேற்றனர். மே. 14 ல் பாதயாத்திரை திருச்செந்தூர் சென்றடைந்து காவடி செலுத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.