Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெங்கடரமண ஸ்வாமி கோவிலில் தேரோட்டம் மழை வேண்டி சுவாமிக்கு அபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழப்பாவூர் கோயிலில் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
11:09

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் முப்புடாதி அம்மன் கோயில் திருவிழா நடத்த மதுரை ஐகோர்ட் அனுமதி வழங்கியதால் 6 ஆண்டுகளுக்கு பிறகு புரட்டாசி திருவிழா நடக்கிறது.கீழப்பாவூரில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் சொத்துக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தை பராமரிப்பதில் இரண்டு பிரிவினர்களுக்கிடையே கடந்த 2006ம் ஆண்டு கோஷ்டி மோதல் ஏற்பட்டு திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்ததால் காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் திருவிழா நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் இரு தரப்பினரும் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் கீழப்பாவூர் வக்கீல் அமுததமிழ்பாண்டியன் தலைமையில் மூன்று பேர், ஓய்வு பெற்ற ஆசிரியர் தர்மராஜ் சார்பில் மூன்று பேர் என 6 பேர் கொண்ட குழுவை அமைத்து ஒற்றுமையாக திருவிழா நடத்த நேற்று முன்தினம் இரவில் அனுமதி வழங்கியது. அனுமதியை பெற்ற திருவிழா குழுவினர் இரவோடு இரவாக திருவிழாவை நடத்தும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக பந்தல் அமைக்கப்பட்டு தயாராக இருந்த கரகாட்டம், மேளம் முழங்க முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் திருவிழா ஆரம்பமானது. நேற்று மாலை சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா, உச்சிகால பூஜைகள் நடந்தது.இன்று (27ம் தேதி) காலை அம்மனுக்கு சந்தனகாப்பு பூஜை, கனி பூஜை, மாவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம், பொங்கலிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா நடத்த ஐகோர்ட் உத்தரவு வழங்கியதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வாரமாக நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar