திருப்புவனம் சுப்ரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 05:05
திருப்புவனம்: திருப்புவனம் சுப்ரமணியசுவாமி கோயிலில் வரும் ஜூன் 2ம் தேதி வெள்ளிக்கிழமை வைகாசி விசாக பெருவிழா நடைபெற உள்ளது. காலை 7:30 மணிக்கு புஷ்பவனேஷ்வரர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலமும், காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை ஆறு மணிக்கு மயில்வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்நெறி தெய்வீக பேரவை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.