ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழாவில் உண்டியல் மூலம் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 213 பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சித்திரை விழா சித்திரை முதல் தேதியில் துவங்கி அடுத்தடுத்த 5 வாரங்கள் நடந்தது. சித்திரை முதல் தேதியில் தேனி, மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். விழா முடிந்த பின் கோயில் செயல் அலுவலர் நதியா, ஆய்வாளர் கார்த்திகேயன், கோயில் பணியாளர்கள் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. காணிக்கையாக கிடைத்த தொகை கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.