பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக 18 ஆயிரத்து 965 கிராம் வெள்ளி கிடைத்தது. பழநி கோயிலில் மே.22 ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. நவதானிய உண்டியல் உட்பட சில உண்டியல்கள் மட்டும் திறந்து எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 45 கிராம் தங்கம், 18 ஆயிரத்து 965 கிராம் வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 54 லட்சத்து 36 ஆயிரத்து 192, மற்றும் 76 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.