பதிவு செய்த நாள்
24
மே
2023
03:05
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர், முத்திபாளையத்தில் உள்ள வீரமாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தது.
தொண்டாமுத்தூர், முத்திபாளையத்தில் வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 22ம் தேதி, மூத்த பிள்ளையார் வேள்வியுடன் துவங்கியது. தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, புற்று மண் எடுத்தல் நடந்தது. மாலை, மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, முதல் கால வேள்வி நடந்தது. நேற்றுமுன்தினம், இரண்டாம் கால வேள்வி, அம்மன் ஊர்வலம், தீர்த்தக்குடம் ஊர்வலம், மூன்றாம் கால வேள்வி நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, நான்காம் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம் நடந்தது. காலை, 6:40 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கலசப்படங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்கள் தலைமையில், விமான கோபுரங்களுக்கும், வீரமாச்சியம்மனுக்கும், மஹா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.