Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோயிலில் வைகாசி ... பிரதிஷ்டை தின பூஜை; சபரிமலையில் நடை திறப்பு.. பக்தர்கள் தரிசனம் பிரதிஷ்டை தின பூஜை; சபரிமலையில் நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

30 மே
2023
10:05

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நள்ளார தியாகேசா தியாகேசா என்று முழுங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காரைக்கால் திருநள்ளார் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில்  அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 16ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினம் விநாயகர்,சுப்பிரமணியர் மற்றும் சுவாமி அம்பாள்,பஞ்சமூர்த்திகள் வீதியுலா,தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. விழாவை ஒட்டி இன்று செண்பக தியாகராஜசுவாமி தேருக்கு எழுந்தருளினார். இதேபோல் மற்றொரு தேரில் நீலோத்பாலாம்பாள்,விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் 5தேர்தளில் எழுந்தருளினர். பின்னர் தேர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து குடிமை பொருள்துறை அமைச்சர் சாய் சரவணன்,சிவா எம்.எல்.ஏ.,கலெக்டர் குலோத்துங்கன்,கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.  நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து நள்ளாற தியாகேசா தியாகேசா என்று முழக்கமிட்டு இழுத்து சென்றனர். ஒரே நேரத்தில் 5தேர்கள் இழுப்பதால் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். ஆர்வத்துடன் ஒவ்வொரு தேர்களையும் இழுத்து சென்றனர். நாளை 31ம் தேதி இரவு செண்பக தியாகராஜ சுவாமி எண்ணைய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும்,தொடர்ந்து நள்ளிரவு சனீஸ்வர பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.வரும் 1ம் தேதி இரவு தெப்போற்சவம் நடைபெற உள்ளது.தேர்திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிமக்கள் பலர் கலந்துகொண்டனர்.பக்தர்கள் பாதுகாப்பு குறித்து எஸ்.பி.,சுப்ரணியன் தலைமையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; துடியலூர், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar