Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரண பத்திரகாளியம்மன் கோயில் பூக்குழி ... நங்கநல்லூர் திருமால் மருகன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நங்கநல்லூர் திருமால் மருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலதெய்வம் வழிபாடு; 15 நாட்களுக்கு பின்பு சொந்த ஊர் திரும்பிய 56 கிராமமக்கள்
எழுத்தின் அளவு:
குலதெய்வம் வழிபாடு; 15 நாட்களுக்கு பின்பு சொந்த ஊர் திரும்பிய 56 கிராமமக்கள்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2023
01:06

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து 56க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ராஜபாளையம் அருகே கூடமுடைய அய்யனார் கோயில் குலதெய்வ வழிபாட்டிற்கு 15 நாள் மாட்டு வண்டியில் பயணத்தை முடித்து மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பினர்.

கமுதி அருகே அகத்தாரிருப்பு தாய்க்கிராமத்தில் இருந்து 56க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தங்கள் குடும்பத்துடன் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றும் வகையில் தங்களது குலதெய்வ வழிபாட்டிற்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எர்ச்சீஸ்வர பொன் இருளப்பசாமி கோயில், சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டி கூடமுடைய அய்யனார் கோயில், சிவகாசி அருகே உள்ள மல்லி வீரமாகாளியம்மன் கோயில் குடும்பத்துடன் மாட்டு வண்டியில் 15 நாள் பயணமாக புறப்பட்டு சென்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் எவ்வளவோ வளர்ச்சி அடைந்தும் நவீன காலத்திலும் கூட பாரம்பரிய மாறாமல் மாட்டுவண்டியில் சென்று மட்டும்தான் எங்கள் குலதெய்வ வழிபாடு தொடர்கிறது. இதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களிலிருந்து மக்களும் ஒன்று சேர்ந்து செல்வது வழக்கமாக உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்பு இப்பயணத்தில் போது 215 மாட்டுவண்டிகள் சென்றோம். 15 நாள் பயணமாக சென்று குலதெய்வ கோயிலில் வழிபட்டு நேற்று சொந்த ஊருக்கு 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டியில் 56 கிராமமக்கள் மீண்டும் திரும்பினார். கொரோனா காலகட்டத்தில் இருந்து மீண்டும் குலதெய்வ கோயிலில் வழிபட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று கிராமமக்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar