Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நங்கநல்லூர் திருமால் மருகன் ... சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை: சிறப்பு அபிஷேகம் சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2023
05:06

நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம் நிகழ்ச்சியில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நத்தம், கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற பழமையான கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் நேற்று கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலையில் 10.33 மணிக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க, சிவாச்சாரியர்களின் மந்திரங்கள் முழங்க தொடங்கியது. இதில் திருத்தேர் வர்ணபூமாலைகளாலும், வண்ண துணிகளாலும் அலங்கரிங்கபட்டு இருந்தது. இந்த தேரில் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளி கோவில்பட்டி, அக்ரஹாரம் வழியாக நகர்வலமாக கோவிலை வந்தடைந்தது. வழிநெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரின் வடங்களை பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. விழாவில் இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், தி‌.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா. முன்னாள் தலைவர்கள் சிவலிங்கம், முத்துகுமார்சாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், நகர செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
அன்னூர்; கோவை அருகே மழை பெய்ய வேண்டி, ஐந்து கிராம மக்கள் கூடி கழுதைகளுக்கு, மேளதாளத்துடன் திருமணம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனத்தில் மழை வேண்டி தவ்ஹீத் ஜமா அத் சார்பில் இன்று சிறப்பு நடந்த சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar