Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பில்லாமல் பாழாகி வரும் ... வைகாசி கடைசி சனி; கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை வைகாசி கடைசி சனி; கதிர் நரசிங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்தன கருப்புசாமி கோவில் திருவிழாவில் நள்ளிரவு கறி விருந்து; ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்
எழுத்தின் அளவு:
சந்தன கருப்புசாமி கோவில் திருவிழாவில் நள்ளிரவு கறி விருந்து; ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2023
05:06

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே தலையாரிபட்டியில் 30 ஆண்டுக்குப் பின் நடந்த சந்தன கருப்பணசாமி கோவில் திருவிழாவில்-ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத நள்ளிரவு கறி விருந்து விழாவில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி தலையாரிபட்டியில் பிரசித்தி பெற்ற சந்தன கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 30 ஆண்டுகளுக்கு திருவிழா நடத்த கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் நேர்த்திக்கடன் உள்ளவர்கள் கிடாய்களை காணிக்கையாக வழங்கினர். நேற்று இரவு சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான ஆண்கள் கோவிலில் குவிந்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. சந்தன கருப்புசாமிக்கு பக்தர்கள் வழங்கிய கிடாய்கள் வெட்டப்பட்டு அதை ஆண்கள் மட்டுமே பெரிய அண்டாக்களில் சோறு, கறிக் குழம்பு தயார் செய்தனர். இந்தநிலையில் நள்ளிரவு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கறிவிருந்து தொடங்கியது. அப்போது திருவிழாவில் கலந்துகொண்ட ஆண்கள் தரையில் வரிசையாக அமர்ந்தார்கள்.அவர்களுக்கு வாழை இலையில் சாதம்,கறிக்குழம்பு உள்ளிட்டவைகளை ஆண்களே பரிமாறினர். இதில் இராமராஜபுரம், தலையாரிபட்டி, திம்மணநல்லூர், கோபால்பட்டி, அய்யாபட்டி, வேம்பார்பட்டி, ஜோத்தாம்பட்டி, வடுகபட்டி, செடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் தர்மராஜன், அ.தி.மு.க., ஜெ.பேரவை இணைச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar