Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர்கள் பாதுகாப்பில் கேள்விக்குறி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 67 ஆண்டுக்கு பின் நடந்த உதயாஸ்தமன பூஜை
எழுத்தின் அளவு:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 67 ஆண்டுக்கு பின் நடந்த உதயாஸ்தமன பூஜை

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2023
03:06

திருவட்டார்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த பாரம்பரியம் மிக்க உதயாஸ்தமன பூஜையில் திருவிதாங்கூர் மன்னர் மற்றும் பொன்பாண்டிய தேவர் வம்சத்தினர் பாரம்பரிய ஆயுதங்களை சமர்ப்பித்து வணங்கினர்.


திருவிதாங்கூர் மன்னராட்சி காலத்தில் 1739ம் ஆண்டு குளச்சலில் டச்சு படையுடனான போர் துவங்கப்பட்டது. 1740ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் உதயமார்த்தாண்ட வர்மா நேரடியாக போர்களத்தில் இறங்கும்முன் திருநெல்வேலியை சேர்ந்த குறுநில மன்னரான பொன்பாண்டிய தேவர் மற்றும் தங்கள் படைகளுடன் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இறைவன் முன் போர் ஆயுதங்களை சமர்ப்பித்து பூஜை செய்தபின் போருக்கு புறப்பட்டு வெற்றி கண்டனர் என்பது வரலாறு. 67 ஆண்டுகளுக்கு பின்.. இந்நிகழ்வை நினைவுகூறும் விதமாக 1956ம் ஆண்டுவரை திருவிதாங்கூர் மன்னர் வம்சாவளியினர் முன்னிலையில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உதயாஸ்­மன பூஜை நடந்து வந்துள்ளது. பின்னர் திருவட்டார் கோவில் த மிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்ததை அடுத்து இந்த பூஜை நடத்தப்படவில்லை. இதை அடுத்து 67 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திருவிதாங்கூர் மற்றும் பொன்பாண்டிய தேவரின் வம்சாவளியினர் சார்பில் நேற்று மாலை உதயாஸ்தமன பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் முன்பு உள்ள உதயமார்த்தாண்ட மண்டபத்தில் மன்னரின் பாரம்பரிய போர் ஆயுதங்கள் பூஜைக்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் தந்திரி மாத்துார்மடம் சங்கரநாராயணரு திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையில் தற்போதைய வம்சாவளியான திருவனந்தபுரம் கவுடியார் அரண்மனை ஸ்ரீஅஸ்வதி திருநாள் தம்புராட்டியிடம் போர் ஆயுதங்களை ஒப்படைத்தார் . மன்னர் பரம்பரையிடம் இருந்து அவற்றை பொன்பாண்டிய தேவர் வம்சாவளியினர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தந்திரிமணலிக்கரை மடம் சஜித் நாராயணரு, பொன்பாண்டிய தேவர் வம்சாவளியை சேர்ந்த கண்ணன், துரை பாண்டியன், பெரியசாமி, திருவட்டார் கோவில் மேலாளர் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar