Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜ பெருமாள் கோவிலில் புஷ்ப ... பிரகதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
200 ஆண்டு கோவில் பூச்சாட்டு திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2023
04:06

அன்னூர்: வடக்கலூரில் 200 ஆண்டு பழமையான கருப்பராயர் கோயில் பூச்சாட்டு திருவிழாவில் இன்று பொங்கல் வைத்தல் நடக்கிறது. வடக்கலூரில் 200 ஆண்டுகள் பழமையான கருப்பராயசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் பூச்சாட்டு திருவிழா நடைபெறும். இக்கோவிலில் சில குடும்பங்களை வழிபாடு செய்ய அனுமதிப்பதில்லை என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஆர்.டி.ஓ., அனைவரையும் கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டுமென அறிவுறுத்தி இருந்தார். இந்த கோவிலில் கடந்த 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூச்சாட்டு திருவிழா துவங்கியது. காப்பு கட்டப்பட்டது. இதை எடுத்து 12 நாட்கள் மாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை குதிரை வாகனம் எடுத்தலும், இரவு படைக்கலம் எடுத்தலும் நடந்தது. இதில் வடக்கலூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை பொங்கல் வைத்தலும், மதியம் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. அலங்கார பூஜையை அடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். நாளை காலை 11:00 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. இதையடுத்து மஞ்சள் நீர் உற்சவமும், மதியம் மறு பூஜையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கலூர் பொதுமக்களும், நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினரும் செய்துள்ளனர். பிரச்னை ஏற்படாமல் இருக்க சிறப்பு காவல் படை போலீசார் இக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.மருதமலை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் ... மேலும்
 
temple news
கோவை; பங்குனி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சுண்டக்காமுத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar