Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெலிங்டன் ஐயப்பன் கோவில் ... காளஹஸ்தி தர்மராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா 23ல் துவக்கம் காளஹஸ்தி தர்மராஜ சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியானலிங்கம் மன அமைதி தருகிறது: திருவாவடுதுறை ஆதினம்
எழுத்தின் அளவு:
தியானலிங்கம் மன அமைதி தருகிறது: திருவாவடுதுறை ஆதினம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2023
10:06

தொண்டாமுத்தூர்;தியானலிங்கம் மன அமைதியை தருகிறது, என, திருவாவடுதுறை ஆதீனத்தின், 24வது குருமஹா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார். திருவாவடுதுறை ஆதினத்தின், 24வது குரு மஹா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கோவை ஈஷா யோகா மையத்துக்கு, நேற்று முன்தினம் இரவு வந்தார். மடாதிபதிகளை வரவேற்கும் சம்பிரதாய முறைப்படி நூற்றுக்கணக்கானோர் திரண்டு, ஆதினத்துக்கு வரவேற்பு அளித்தனர். அதன்பின், குரு மஹா சன்னிதானம், பார்வையிடுவதற்காக ஆதியோகியில் சிறப்பு திவ்ய தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை, கைலாய வாத்தியங்கள் முழங்க, குரு மஹா சன்னிதானத்தை, ஊர்வலமாக ஆலயங்களுக்கு அழைத்து சென்றனர்.

ஆதினம், தியானலிங்கம், லிங்கபைரவி, நாகசன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று, தரிசனம் செய்தார். நாட்டு மாடுகளை பராமரிக்கும் ஈஷாவின் கோசாலையை பார்வையிட்டார். அதன்பின், ஈஷா சமஸ்கிருதி குருகுலத்திற்கு சென்று, மாணவர்களின் களரி பயட்டை நேரில் கண்டு களித்ததோடு, மாணவர்களுடன் கலந்துரையாடினார். நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுக்கு, ஆசி வழங்கினார். குரு மஹா சன்னிதானம் கூறுகையில், இங்குள்ள தியானலிங்கம் மன அமைதியை தருகிறது. தேவார பாடசாலை மற்றும் கோசாலையை, மிக அருமையாக பராமரித்து வருகிறார்கள். இது மிகப்பெரிய புண்ணியம். அதேபோல், பாரம்பரிய சிறு தானிய உணவுகளை கொண்டு, இங்கு அன்னதானம் அளிக்கிறார்கள். இயற்கை விவசாயத்தை கற்றுத்தருவது, மரங்கள் நடும் பணிகளை மேற்கொள்வது போன்ற ஈஷாவின் செயல்கள் பாராட்டுக்குரியவை, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar