Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெலிங்டன் ஐயப்பன் கோவில் ... காளஹஸ்தி தர்மராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா 23ல் துவக்கம் காளஹஸ்தி தர்மராஜ சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியானலிங்கம் மன அமைதி தருகிறது: திருவாவடுதுறை ஆதினம்
எழுத்தின் அளவு:
தியானலிங்கம் மன அமைதி தருகிறது: திருவாவடுதுறை ஆதினம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2023
10:06

தொண்டாமுத்தூர்;தியானலிங்கம் மன அமைதியை தருகிறது, என, திருவாவடுதுறை ஆதீனத்தின், 24வது குருமஹா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார். திருவாவடுதுறை ஆதினத்தின், 24வது குரு மஹா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கோவை ஈஷா யோகா மையத்துக்கு, நேற்று முன்தினம் இரவு வந்தார். மடாதிபதிகளை வரவேற்கும் சம்பிரதாய முறைப்படி நூற்றுக்கணக்கானோர் திரண்டு, ஆதினத்துக்கு வரவேற்பு அளித்தனர். அதன்பின், குரு மஹா சன்னிதானம், பார்வையிடுவதற்காக ஆதியோகியில் சிறப்பு திவ்ய தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை, கைலாய வாத்தியங்கள் முழங்க, குரு மஹா சன்னிதானத்தை, ஊர்வலமாக ஆலயங்களுக்கு அழைத்து சென்றனர்.

ஆதினம், தியானலிங்கம், லிங்கபைரவி, நாகசன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று, தரிசனம் செய்தார். நாட்டு மாடுகளை பராமரிக்கும் ஈஷாவின் கோசாலையை பார்வையிட்டார். அதன்பின், ஈஷா சமஸ்கிருதி குருகுலத்திற்கு சென்று, மாணவர்களின் களரி பயட்டை நேரில் கண்டு களித்ததோடு, மாணவர்களுடன் கலந்துரையாடினார். நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுக்கு, ஆசி வழங்கினார். குரு மஹா சன்னிதானம் கூறுகையில், இங்குள்ள தியானலிங்கம் மன அமைதியை தருகிறது. தேவார பாடசாலை மற்றும் கோசாலையை, மிக அருமையாக பராமரித்து வருகிறார்கள். இது மிகப்பெரிய புண்ணியம். அதேபோல், பாரம்பரிய சிறு தானிய உணவுகளை கொண்டு, இங்கு அன்னதானம் அளிக்கிறார்கள். இயற்கை விவசாயத்தை கற்றுத்தருவது, மரங்கள் நடும் பணிகளை மேற்கொள்வது போன்ற ஈஷாவின் செயல்கள் பாராட்டுக்குரியவை, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar