Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயர் கோவிலில் அன்னப்பாவாடை ... நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர் திருவிழா; பந்தல் பணிகள் ஜரூர் நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
7 கிராமத்தினர் சேர்ந்து 10 ஆண்டுக்கு பின் நடத்திய முத்தாலம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
7 கிராமத்தினர் சேர்ந்து 10 ஆண்டுக்கு பின் நடத்திய முத்தாலம்மன் கோவில் திருவிழா

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2023
10:06

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி முத்தாலம்மன் கோவிலில் 10 ஆண்டுக்கு பின் 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழா நடத்த முடிவு செய்து, பிடி மண் கொடுக்கும் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோபால்பட்டி அருகே உள்ளது கோம்பைபட்டி முத்தாலம்மன் கோவில். இந்தக் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருவிழா நடந்தது. அதன்பின் கடந்த வாரம் கே.அய்யாபட்டி, கோம்பைபட்டி, பாப்பம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கடுக்காபட்டி, சரளப்பட்டி, சின்னக் கோம்பைபட்டி உள்ளிட்ட ஏழு கிராம மக்கள் கூட்டம் போட்டு ஒன்றிணைந்து 15 நாட்கள் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதனை அடுத்து நேற்று சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொரு கிராமத்தினராக மேளதாளம் முழங்க அய்யாபட்டியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு மஞ்சள் ஆடை அணிந்து வந்தனர். தொடர்ந்து அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து அங்கிருந்து சந்தான வர்த்தினி ஆற்றின் அருகே சாமி சிலை செய்ய பிடிமன் எடுத்தனர். தொடர்ந்து இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் வரும் ஜூலை 4 அம்மன் அலங்கார நகை பெட்டி அழைத்து வருதல், சப்பரபவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். ஜூலை 5 குட்டி கழுகு மரம் ஏறுதல், முளைப்பாரி, தீச்சட்டி, மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவர். மறுநாள் கழுகு மரம் ஏறி, அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை 7 கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar