Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரையில் 3 ஆண்டிற்கு பின் ... குண்டும் குழியுமான பெரியகுளம் ரோடு கவுமாரியம்மன் வீதி உலா சிரமம் குண்டும் குழியுமான பெரியகுளம் ரோடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2023
05:07

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதிய அறங்காவலர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். துணை கமிஷனர் அந்தஸ்திலான இக்கோவிலுக்கு, கடந்த சில ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இக்கோவிலுக்கு, பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக ஐந்து பேரை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து, அறங்காவலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்தது. இதில், ஜெயக்குமார் என்பவரை மற்ற நான்கு உறுப்பினர்களும் ஒருமனதாக அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனையடுத்து, ஜெயக்குமார், அறங்காவலர் குழு தலைவராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து, அறங்காவலர் குழு உறுப்பினர்களாக மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், துணை கமிஷனர் ஹர்ஷினி, உதவி கமிஷனர் கருணாநிதி மற்றும் கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாடானை; திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி  கரியமாணிக்க பெருமாள், ... மேலும்
 
temple news
பாலக்காடு; செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் உற்சவத்திற்காக புதிய தேர் கட்டும் பணி ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த கட்சிக்குத்தான் கிராமத்தில் உள்ள மாணிக்க ராசப்பர் கோவில் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி ஜெ. நகரில் கற்பக விநாயகர் வடக்கத்தி அம்மன் கோயில் 11 வது ஆண்டு தெருக்கட்டு பொங்கல் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar