Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் ... சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா துவங்கியது சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி முதல் வெள்ளி; மடப்புரம் காளி கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆடி முதல் வெள்ளி; மடப்புரம் காளி கோயிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2023
10:07

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீப தூபங்கள் காண்பிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் அம்மன் முன்பு உள்ள விளக்கேற்றும் மண்டபத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மதுரை, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோன்று, திருப்புவனம் முத்துமாரியம்மன், லாடனேந்தல் வீரமாகாளியம்மன் கோயில், பாப்பாங்குளம் பூங்காவன முத்துமாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

முன்னேற்பாடுகள் : தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும், இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகளில் சென்று அம்மனை தரிசனம் செய்து நெரிசலின்றி தரிசனம் செய்யலாம், மேலும் திருப்புவனம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பஸ்கள் தவிர மற்ற எந்த வாகனங்களும் கோயில் வரை அனுமதிக்கப்படாது, ஷேர் ஆட்டோக்கள், பயணிகளின் வாகனங்கள் அனைத்தும் மடப்புரம் விலக்கு அருகே நிறுத்தப்பட்டு பக்தர்கள் இறங்கி நடந்து சென்று அம்மனை தரிசனம் செய்து செல்ல வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar