Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை அரசாளும் மீனாட்சி... சிலை ... பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை பகவதி அம்மன் கோயிலில் குங்கும ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜபாளையம் கண்மாயில் 17ம் நுாற்றாண்டு பழமையான கல் சிலைகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
ராஜபாளையம் கண்மாயில் 17ம் நுாற்றாண்டு பழமையான கல் சிலைகள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2023
05:07

ராஜபாளையம்: ராஜபாளையம் மடத்துப்பட்டி அருகே கொண்டனேரி கண்மாயில் 17ம் நுாற்றாண்டை சேர்ந்த பழமையான கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி இதுகுறித்து கூறியதாவது: கண்மாயில் 2 நடுகல் சிலைகளும், ஒரு சதிக்கல்லும் கல் மேடை அமைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல் சிலைகள் அனைத்தும் கி.பி., 17ம் நுாற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. மறைந்த இரண்டு வீரர்களுக்கு தனித்தனியே எடுக்கப்பட்ட நடுகல், வீரன் இறந்தவுடன் மனைவியும் சேர்ந்து தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வுக்காக எடுக்கப்பட்ட சதிக்கல்லும் காணப்படுகிறது. முதல் நடுகல் சிலை கூம்பு வடிவில் மாடக்கோயில் போன்று வடிவமைத்து வீரன் நின்ற நிலையில் இடது கையில் ஈட்டியை பிடித்து, வலது கையில் இடுப்பில் உள்ள குறுவாளை கை வளையத்தில் இணைத்துள்ளது போன்றும் காட்டப்பட்டுள்ளது. வீரனின் வலது பக்க தலை கொண்டை அலங்காரம், அவரது உருண்டு திரண்ட கண்களும் முருக்கு மீசையுடனும் பனை ஓலை காதணிகளை அணிந்தவாறும் சிலை உள்ளது. கழுத்தணிகலன்களும், கைகாப்பு, கைபட்டைகளும், இடை ஆடை குஞ்சம் வைத்து மடித்து கட்டப்பட்டுள்ளதும், மூட்டு கவசமும் கால் சிலம்பு அணிந்துள்ளதையும் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நடுக்கல் சிலையின் மேல் பகுதி இரண்டடுக்கு மாட கோபுர அமைப்பு போன்று வடிவமைக்கப்பட்டு கீழே வீரன் ஒருவன் என்ற நிலையில் குத்தீட்டியின் மேல் பகுதியை தனது வலது கை கொண்டும் கீழ் பகுதியை இடது கைகொண்டு பிடித்து தரையில் ஊன்றிய படி சிலை அமைந்துள்ளது. வீரனின் இடது பக்க தலை கொண்டை அலங்காரம், நீண்ட காதணிகள், கழுத்தணிகள், கைக்காப்பு, பூ மாலை அலங்காரம், மார்பில் சன்ன வீரம், இடை ஆடையில் இடுப்பு கச்சம் இணைத்து கட்டப்பட்டு குஞ்சம் தொங்கிய நிலையில் காற் சிலம்புடன் உள்ளது. மூன்றாவதாக சதிக்கல் சிற்பத்தில் வீரனும், மனைவியும் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மூன்று சிலைகளையும் கருப்பசாமி, கருப்பாயி, சுடலைமாடன் என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கண்மாய் தண்ணீர் நிரம்பிய போது சிற்பங்கள் நீரில் மூழ்கி இருந்துள்ளது. இவற்றின் மூலம் பல ஆண்டுகளுக்கு முன் வீரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளதை அறிய முடிகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar