திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் ஆடிப்பெருக்கு செவ்வாயை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில், சாய்பாபா கோவில் உள்ளது. ஆடிப்பெருக்கு செவ்வாயை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு வேத பாராயணம், ஹோமங்கள், 10:00 மணிக்கு பாபாவிற்கு மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, ஆரத்தி வழிபாடு முரளிதர சுவாமிகள் முன்னின்று நடத்தினார். கோவில் நிர்வாகி சுப்பு தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு பஜனை நடந்தது.