Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் விழா; ... காளஹஸ்தி சிவன் கோயிலில் ராஜஸ்தான் அமைச்சர் ராகு கேது சர்ப்ப தோஷ பூஜை செய்து வழிபாடு காளஹஸ்தி சிவன் கோயிலில் ராஜஸ்தான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாடு; மழையினால் வனத்துறை நிம்மதி.. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாடு; மழையினால் வனத்துறை நிம்மதி.. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

11 ஆக
2023
04:08

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு நாளை (ஆக.12) முதல் ஆக‌ 17 ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக மலைப்பகுதியில் பெய்த மழையினால் ஓடைகளில் லேசான நீர்வரத்து ஏற்பட்டதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை இல்லாமல் சதுரகிரி மலைப்பகுதி மிகவும் வறண்டு காய்ந்து கிடந்தது. மலையில் இரண்டு முறை தீ விபத்தும் ஏற்பட்டு வனத்துறையினரால் அணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களை அனுப்புவதில் வனத்துறையினர் மிகுந்த அச்சமடைந்து இருந்தனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களாக இரவு 6:00 மணிக்கு மேல் சதுரகிரி கோயில் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதிகளில் சாரல் மழை பெய்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடைகளில் குறைந்த அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர். நாளை முதல் தினமும் காலை 05:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படும் நிலையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்கவும், முதியவர்கள், உடல் கோளாறு உடையவர்கள் மலை ஏறுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தானிப்பாறை மலையடிவாரம், மந்தித்தோப்பு, மாவூத்து பகுதிகளில் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 24 மணி நேர மருத்துவ உதவி மையமும், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மதுரை மாவட்ட மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபடுகின்றனர். 108 ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவ குழு, ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகளவில் தங்கும் தோப்புகளின் கிணறுகளில் குளோரிநேசன் செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும், ஆகஸ்ட் 15, 16 ஆம் தேதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வருவாய்த்துறை, போலீஸ், வனத்துறை, மருத்துவ துறை உட்பட பல்வேறு அரசு துறை சார்பில் தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar