Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... 3 ஆயிரம் வளையல் அலங்காரத்தில் இருக்கன்குடி மாரியம்மன் அருள்பாலிப்பு 3 ஆயிரம் வளையல் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசையில் உள்வாங்கிய தேவிபட்டினம் கடல் ; பக்தர்கள் கடும் அவதி
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசையில் உள்வாங்கிய தேவிபட்டினம் கடல் ; பக்தர்கள் கடும் அவதி

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
05:08

தேவிபட்டினம்; தேவிபட்டினம் கடல் உள்வாங்கியதால், ஆடி அமாவாசை தினத்தில் புனித நீராட வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடல் நீர் நவபாஷாண கடற்கரையில் இருந்து சுமார் 600 மீட்டர் வரை உள்வாங்கி காணப்பட்டது. வழக்கத்தைவிட நவக்கிரகங்கள் அமைந்துள்ள பகுதியையும் தாண்டி கடல் நீர் இன்றி காணப்பட்டதால், நீராட வந்த பக்தர்கள் போதிய தண்ணீர் இன்றி கடும் சிரமம் அடைந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் குறைந்த அளவு நீரில் நீராடியதால், தண்ணீர் மிகவும் கலங்கலாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தவாறு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் நீர் உள்வாங்கி காணப்படுவது வழக்கமான நிகழ்வு என்றாலும், அதிக தொலைவு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் மீனவர்களும், பொது மக்களும் அச்சமடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. பெருமாள் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar