Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... 3 ஆயிரம் வளையல் அலங்காரத்தில் இருக்கன்குடி மாரியம்மன் அருள்பாலிப்பு 3 ஆயிரம் வளையல் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசையில் உள்வாங்கிய தேவிபட்டினம் கடல் ; பக்தர்கள் கடும் அவதி
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசையில் உள்வாங்கிய தேவிபட்டினம் கடல் ; பக்தர்கள் கடும் அவதி

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
05:08

தேவிபட்டினம்; தேவிபட்டினம் கடல் உள்வாங்கியதால், ஆடி அமாவாசை தினத்தில் புனித நீராட வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடல் நீர் நவபாஷாண கடற்கரையில் இருந்து சுமார் 600 மீட்டர் வரை உள்வாங்கி காணப்பட்டது. வழக்கத்தைவிட நவக்கிரகங்கள் அமைந்துள்ள பகுதியையும் தாண்டி கடல் நீர் இன்றி காணப்பட்டதால், நீராட வந்த பக்தர்கள் போதிய தண்ணீர் இன்றி கடும் சிரமம் அடைந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் குறைந்த அளவு நீரில் நீராடியதால், தண்ணீர் மிகவும் கலங்கலாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தவாறு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் நீர் உள்வாங்கி காணப்படுவது வழக்கமான நிகழ்வு என்றாலும், அதிக தொலைவு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் மீனவர்களும், பொது மக்களும் அச்சமடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar