Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் சுவற்றில் துளையிட்டு ... ஓணம் பண்டிகை: குருவாயூரில் உத்திராடம் தின நேந்திரன் பழக்குலை சமர்ப்பணம் ஓணம் பண்டிகை: குருவாயூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் பவித்ரோத்ஸவம் விழா; ஸ்நபன திருமஞ்சனம்.. பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருமலையில் பவித்ரோத்ஸவம் விழா; ஸ்நபன திருமஞ்சனம்.. பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 ஆக
2023
04:08

திருப்பதி; திருமலையில் நடந்து வரும் பவித்ரோத்ஸவம் விழா இரண்டாம் நாளில் பெருமாளுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும். இவ்விழாவானது திருமலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இரண்டாம் நாளில் காலை யாகசாலையில் ஹோமம் மற்றும் வேள்வி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பின் சம்பங்கி பிரகாரத்தில் ஸ்னபன திருமஞ்சனம் நடைபெற்றது.


 பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், வேதகோஷம் மற்றும் மங்கள வாத்தியங்களுடன், ஸ்ரீவாரி மூலவர், உற்சவ மூர்த்திகள், ஜெய விஜயர்கள், கருடாழ்வார்கள், வரதராஜசுவாமிகள், வகுளமாதா அம்மா, ஆனந்த நிலையம், யாகசாலை, விஷ்வக்சேனர்கள், யோகநரசிம்மசுவாமி, பாஷ்யகர்கள், பொது தாயார், கொடிமரம், புவரஹஸ்வாமி மற்றும் ஸ்ரீ பேடி ஆஞ்சநேயசுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீமலையப்பசுவாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 8 மணி முதல் 11 மணி வரை யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன் காரணமாக கோயிலில் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், சஹஸ்ரதிபாலங்கரண சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இன்றைய விழாவில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெத்தஜெயர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்னஜெயர் சுவாமி, இ.வி.தர்மரெட்டி தம்பதி, கோயில் துணை இஓ ஸ்ரீ லோகநாதம், பேஷ்கார் ஸ்ரீ ஸ்ரீஹரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 
temple news
கோவை; கோவை பொள்ளாச்சி - ரோடு ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
களியக்காவிளை, செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிதாக கட் டப்பட்ட தேவலோகம் திறப்பு விழா நடந்தது. தமிழக- ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar