Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு; ... மலையே சிவன்; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மலையே சிவன்; திருவண்ணாமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல ஆண்டுகளாக குரங்குகளுக்கு ஓணம் விருந்து: கேரளாவில் அரங்கேறிய அதிசயம்
எழுத்தின் அளவு:
பல ஆண்டுகளாக குரங்குகளுக்கு ஓணம் விருந்து: கேரளாவில் அரங்கேறிய அதிசயம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2023
10:08

கொல்லம்: ஓணம் பண்டிகையையொட்டி பல ஆண்டுகளாக கேரள கோவிலில் குரங்குகளுக்கு விருந்து அளிக்கும் பாரம்பரிய வழக்கம் இந்த ஆண்டும் நிறைவேற்றப்பட்டது.

மலையாள மக்களின் அறுவடை திருநாளான ஓணம் பண்டிகை 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணம் நட்சத்திரம் அன்று ஓணம் சத்யா எனப்படும் விருந்து பரிமாறப்படுவது வழக்கம். கொச்சியின் சாஸ்தாம்கோட்டா என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் நுாற்றுக்கணக்கான குரங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. பல ஆண்டுகளாக ஓணம் தினத்தன்று இந்த குரங்குகளுக்கு விருந்து அளிப்பதை கோவில் நிர்வாகம் பாரம்பரிய வழக்கமாக கடைபிடித்து வருகிறது. சீதையை தேடி ராமர் இலங்கை சென்ற வழியில் அவர் இந்த கோவிலில் ஓய்வெடுத்ததாகவும் அப்போது அவருடன் வந்த வானரப்படைகள் இந்த கோவிலில் நிரந்தரமாக தங்கி விட்டதாகவும் புராண கதைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையின் போது கோவிலில் வாழை இலை விரித்து குரங்குகளுக்கு விருந்து பரிமாறப்பட்டது. சாதம் குழம்பு பொறியல் கூட்டு அப்பளம் ஊறுகாய் பாயசம் என அனைத்து உணவுகளும் பரிமாறப்படும் வரை குரங்குகள் மரக்கிளைகளில் பொறுமையாக காத்திருந்தன. இலையில் கடைசி உணவு பரிமாறப்பட்டதும் குரங்குகள் ஒவ்வொன்றாக கீழே இறங்கி வந்து இலையில் அமர்ந்து விருந்தை ருசித்து சாப்பிட்டன. இந்தக் காட்சியை புதிதாக பார்த்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar