Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் மாரியம்மன் கோவிலில் ... அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம்; இறுதி கட்ட பணி மும்முரம் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசரா யானைகளுக்கு அரண்மனை வளாகத்தில் வரவேற்பு
எழுத்தின் அளவு:
மைசூரு தசரா யானைகளுக்கு அரண்மனை வளாகத்தில் வரவேற்பு

பதிவு செய்த நாள்

06 செப்
2023
12:09

மைசூரு: தசரா விழாவுக்காக முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்ட யானைகளுக்கு, நேற்று மைசூரு அரண்மனை வளாகத்திற்குள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் முக்கிய அடையாளமே விஜயதசமி அன்று நடக்கின்ற ஜம்புசவாரி ஊர்வலம் தான். யானை மீது தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை அமரவைத்து, ஊர்வலம் அழைத்துச்செல்வதை பார்ப்பதற்காக, பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருவர். இதற்காக ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, காட்டில் இருந்து யானைகள் அழைத்து வரப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். முதல்கட்டமாக மத்திகோடு, துபாரே , ராம்புரா முகாம்களில் இருந்து ஒன்பது யானைகள், கடந்த 1ம் தேதி மைசூரு நகருக்கு அழைத்து வரப்பட்டன. இந்த யானைகள் நகரின் அரண்ய பவன் வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன. இங்கு, அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளுக்கு மைசூரு மண்டல வன பாதுகாவலர் மாலதி பிரியா தலைமையில் பூஜை செய்து, மலர் துாவி, நேற்று அரண்மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பின், நண்பகல் 12:01 மணி முதல், 12:51 மணிக்குள் அபிஜித் சுப லக்னத்தில், ஜெயமார்த்தாண்டா நுழைவு வாயிலில் பூஜை செய்து, அரண்மனை வளாகத்துக்குள் பாரம்பரிய முறைப்படி அழைத்துச்செல்லப்பட்டன. மாவட்ட நிர்வாகமும் அரண்மனை நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில், அரசு சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா பங்கேற்று, யானைகளை வரவேற்றார். நாதஸ்வரம், மேளதாளங்கள், டொல்லுகுனிதா ஆகிய நாட்டுப்புறகலைகளுடன் யானைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 
temple news
காரைக்கால்;  உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ஆதி சங்கராச்சார்ய சாரதா லட்சுமி ந்ருஸிம்ஹ பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ... மேலும்
 
temple news
மதுரை; ரிங்ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே நாளை நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் முருகனின் அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar