Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் விநாயகர் ... கூடலூரில் விநாயகர் சதுர்த்தி விழா கூடலூரில் விநாயகர் சதுர்த்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோட்டை உச்சிபிள்ளையாருக்கு 150 கிலோ ராட்ஷத கொழுக்கட்டை படையலிட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
மலைக்கோட்டை உச்சிபிள்ளையாருக்கு 150 கிலோ ராட்ஷத கொழுக்கட்டை படையலிட்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

18 செப்
2023
03:09

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு, தலா, 75 கிலோ என மொத்தம், 150 கிலோ எடையுள்ள "ராட்ஷத கொழுக்கட்டைகள் நெய்வேத்யம் செய்யப்பட்டது.

விநாயகர் அவதார திருநாளான விநாயக சதுர்த்தி விழா, திருச்சி மாவட்டத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கிய கடைவீதி பகுதிகளில் விற்கப்பட்ட களிமண் விநாயகர்களை, வீடுகளில் வைத்து வழிபட பெண்கள் வாங்கிச் சென்றனர். விநாயகருக்கு விருப்பமான, அப்பம், பொரி, கொழுக்கட்டை போன்ற உணவுப் பொருட்களையும், கொய்யா, பேரிக்காய், வாழைப்பழம் போன்ற பழ வகைகளையும் படையலிட்டு விநாயகரை மனதார வழிபட்டனர்.

பிரம்மாண்ட கொழுக்கட்டை: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு, தலா, 75 கிலோ என மொத்தம், 150 கிலோ எடையுள்ள "ராட்ஷத கொழுக்கட்டைகள் நெய்வேத்யம் செய்யப்பட்டது. "பிரம்மாண்ட கொழுக்கட்டைகள் தயாரிக்கும் பணியில், நேற்று மதியத்தில் இருந்து கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஈடுபட்டனர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். இந்த கலவையை இரு பங்காக பிரித்து, துணியில் கட்டி, பெரிய பாத்திரத்தில் வைத்து, இன்று காலை வரை தொடர்ந்து, 18 மணி நேரம் அவித்தனர். காலை 9.30 மணிக்கு உச்சிப்பிள்ளையாருக்கு "சுடச்சுட கொழுக்கட்டை நெய்வேத்யம் செய்யப்பட்டது. கீழே உள்ள மாணிக்க விநாயகருக்கு, காலை 10.30 மணிக்கு கொழுக்கட்டை நெய்வேத்யம் செய்யப்பட்டது. நெய்வேத்யம் செய்யப்பட்ட கொழுக்கட்டைகள், பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பாலகணபதி அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar