Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகரின் முதல் படை வீடு; ... களிமண்ணால் 5 அடி விநாயகர் சிலை செய்து அசத்திய சிறுவர்கள் களிமண்ணால் 5 அடி விநாயகர் சிலை செய்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் அமைச்சர்களுக்கு நல்ல புத்தி வேண்டி விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு வேண்டுதல்
எழுத்தின் அளவு:
சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் அமைச்சர்களுக்கு நல்ல புத்தி வேண்டி விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு வேண்டுதல்

பதிவு செய்த நாள்

18 செப்
2023
17:05

பல்லடம்: இந்து மதத்தை இழிவுபடுத்தும் அமைச்சர்களுக்கு நல்ல புத்தி கொடு என, பல்லடத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில், தோப்புக்கரணம் போட்டு வேண்டுதல் நடந்தது.

தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இந்து அமைப்பின் சார்பில், விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பாரத மாணவர் பேரவை சார்பில், என்.ஜி.ஆர்., ரோட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பேரவையின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். விநாயகர் வழிபாட்டின்போது, சனாதன தர்மத்தை இழிவுபடுத்திய அமைச்சர்களுக்கு நல்ல புத்தியை கொடு விநாயகப் பெருமானே. விநாயக பெருமானே, தமிழக அரசுக்கு நல்ல புத்தியை கொடு என, தோப்புக்கரணம் போட்டு, விநாயகரிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது.

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்து, பல்வேறு தரப்பினர் மத்தியிலும், கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. அவ்வகையில், விநாயகர் சதுர்த்தியான இன்று அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு கண்டனம் தெரிவிக்கும்படியாக இந்நிகழ்ச்சி நடந்தது. இது குறித்து அண்ணாதுரை கூறுகையில், சனாதனம் குறித்த அமைச்சரின் கருத்து, இந்து மக்களை பெரிதும் புண்படுத்தி உள்ளது.‌ அறநிலையத்துறை அமைச்சர் இந்து மதத்தை இழிவுபடுத்தும்படியான அந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும்‌ கண்டனத்துக்கு உரியது. எனவே, அவர்களுக்கு நல்ல புத்தியை விநாயகர் வழங்க வேண்டும் என வேண்டி வழிபாடு செய்தோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கும்பகோணம் அருகே வட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள கிரிகுஜாம்பிகையம்மன், பிறையணியம்மன் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.கன்னியாகுமரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்சவ விழா அக். 15 முதல் ... மேலும்
 
temple news
திருப்பதி : வரும் அக்.,28ம் தேதி சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.  சந்திர கிரகணம் காரணமாக அக்.,28 மாலை 7.05 மணி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar