Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சுழியில் நீருக்கு அதிபதியான ... விநாயகர் சதுர்த்தி விழாவில் நெகிழ்ச்சி; சீர்வரிசை தட்டுடன் முஸ்லிம்கள் விநாயகர் சதுர்த்தி விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்தாரா பட காட்சிகளை போல் விநாயகர் செட் ; சதுர்த்தி விழாவில் ருசிகரம்
எழுத்தின் அளவு:
காந்தாரா பட காட்சிகளை போல் விநாயகர் செட் ; சதுர்த்தி விழாவில் ருசிகரம்

பதிவு செய்த நாள்

20 செப்
2023
01:09

ஓசூர்: ‘காந்தாரா’ பட காட்சிகளை போல் செட் அமைத்து, தேன்கனிக்கோட்டையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துள்ளது, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா, ஸ்ரீராஜ மார்த்தாண்ட கணபதி பக்த மண்டலி சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கன்னட மொழி திரைப்படமான ‘காந்தாரா’ பட காட்சிகளை போல் செட் அமைத்து, அதில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். முகப்பில் பிரமாண்ட உருவத்தில் பன்றி முகம் மற்றும் முன்னங்கால் அமைக்கப் பட்டுள்ளன. அதில் நுழைந்து சென்றால் காந்தாரா செட்டிற்குள் செல்ல முடியும். அங்கு, 20 அடி அரியணையில், பஞ்சுருளி சுவாமி சிலை உள்ளது. அதன் கீழ் அருள் வந்து ஆடும் பூசாரி உருவம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. செட்டின் வலதுபுறம் ‘காந்தாரா’ படத்தில் மன நிம்மதி தேடி காட்டுக்குள் வரும் ராஜா, பஞ்சுருளி சுவாமியை பார்ப்பது போன்ற காட்சியும், அருள் வந்து ஆடும் பூசாரியிடம், அருள்வாக்கு பெற்ற பின், பரிவட்டம் கட்டியிருப்பது போன்ற தோற்றத்தில், ராஜா வேடத்தில் ராஜ மார்த்தாண்ட கணபதியும் காட்சியளிக்கின்றனர். இது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏராளமான பக்தர்கள் செட் முன் நின்று, ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர். இந்த செட் அமைக்க, 15 நாட்கள் விரதமிருந்து வேலை செய்துள்ளனர். மேலும், விநாயகர் சிலையை கரைத்த பின், தர்மஸ்தலா அருகே உள்ள பஞ்சுருளி அன்னப்ப சுவாமி கோவிலுக்கு சென்று விரதத்தை முடிப்பதாக, ஸ்ரீராஜ மார்த்தாண்ட கணபதி பக்த மண்டலி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar