Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி : போடி பெருமாள் ... திருப்பதியில் தங்க தேரோட்டம்; மங்கள வாத்தியம் முழங்க பக்தர்கள் பரவசம் திருப்பதியில் தங்க தேரோட்டம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா; தாசர்களுக்கு அரிசி, பருப்பு படைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா; தாசர்களுக்கு அரிசி, பருப்பு படைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

23 செப்
2023
05:09

அன்னூர்: பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர்.

திருப்பதியில், ஏழு மலைகளுக்கு நடுவே வெங்கடேச பெருமாள் அருள் பாலிக்கிறார். அதேபோல் கோவை மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள, மொண்டி பாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலும் ஏழு மேடுகளுக்கு அடுத்து அமைந்துள்ளது. இக் கோவில் மேலைத் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமைகளில் இங்கு திருவிழா நடக்கிறது. திருவிழாவில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரம் பக்தர்கள் வந்து தரிசிப்பது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமையான இன்று அதிகாலை 4:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாளுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அதிகாலை 3:00 மணி முதலே பல்லாயிரம் பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பஜனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது, உற்சவர் கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். பக்தர்கள் தாசர்களுக்கு, அரிசி, பருப்பு மற்றும் தானியங்களை படைத்து வழிபட்டனர். கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூரில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வரும் 30 ம் தேதி மூன்றாவது சனிக்கிழமை காலையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. மாலையில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமி திருவீதியுலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar