Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோயில்களில் சங்கடஹர ... புரட்டாசி சோமவாரம்; புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் புரட்டாசி சோமவாரம்; புவனேஸ்வரருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரியாபட்டி அருகே 10ம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
காரியாபட்டி அருகே 10ம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

02 அக்
2023
03:10

காரியாபட்டி: காரியாபட்டி டி. கடமன்குளத்தில் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

காரியாபட்டி டி. கடம்பன்குளத்தில் கண்மாய்க்கரையில் கருப்பசாமி கோவில் பின்புறம் பழமையான சிற்பங்கள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் தர்மராஜா, அழகுபாண்டி தகவலில், உதவிப்பேராசிரியர் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் கள ஆய்வு செய்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பங்கள் என தெரிந்தது. அவர்கள் கூறியதாவது, அய்யனார் சிற்பம் 2.5 அடி உயரத்தில், தலையில் கிரீடத்துடன் அகன்ற ஜடாபாரம், நீண்ட காதுகளில் பத்ரகுண்டலங்கள், வலது கரத்தில் மலர் செண்டை, இடது கரத்தின் கீழே தொங்கவிட்டும், அரை ஆடையுடனும், இடது காலில் யோகப்பட்டையுடன் முற்கால பாண்டியர்களுக்கு உரித்தான கலைநயத்தில் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் வலது, இடது முறையே பூர்ணகலை, புஷ்பகலை சிற்பங்கள் ஆடை ஆபரணங்களுடன் சுகாசன கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விரு சிற்பங்களின் கைகளில் மலர் செண்டை பிடித்தபடி அழகாக வடிக்கக்பட்டுள்ளது. வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் அய்யனார் வழிபாடு சிறந்து விளங்கியிருக்க வேண்டும். தற்போதும் இச்சிற்பம் வழிபாட்டில் உள்ளது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ‘‘ஆன்மிகம், அதன் அதிசயத்தை பற்றி முழுமையாக உணர்ந்திருந்தார்கள் என்றால், அவர்கள் ... மேலும்
 
temple news
நாமக்கல்: குளிர்காலம் துவங்கியதையொட்டி, நடப்பாண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
செந்துறை; நத்தம் அருகே செந்துறை-குரும்பபட்டியில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar