Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரட்டாசி சனிக்கிழமை பூஜை ... காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு கேது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தள்ளாத வயதிலும் தளராத ஆன்மிக ஸ்தல யாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2023
05:10

எரியோடு: எரியோட்டில் அரசு பணி ஓய்வு பெற்றவர்கள் குழு, வயதால் உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் ஆன்மிக பணியில் ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.

அரசு பணிக்கு பின்னர் வீட்டிலே முடங்கி இருக்காமல் எரியோடு பகுதியை சேர்ந்த ஒரு குழுவினர் திருஅருள்பேரவை என்ற ஒரு சத்சங்கத்தை துவங்கி ஆன்மிகப் பணிகளை செய்து வருகின்றனர். இதன் தலைவராக குண்டாம்பட்டி ராமகிருஷ்ணன் 93, எரியோடு மாரிமுத்து 74, செயலாளராக துாங்கணம்பட்டி பழனிச்சாமி 82 மற்றும் நிர்வாகிகள் பலர் உள்ளனர். பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களே அதிகம். கடந்த 34 ஆண்டுகளாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் 30 கி.மீ., துாரத்திற்குட்பட்ட பெருமாள் கோயில்களுக்கு ஏராளமான பக்தர்களுடன் யாத்திரை செல்கின்றனர். துவக்க கால பயணத்தில் மக்களிடம் பிரபலமாகாத கோயில்களை கண்டறிந்து முன்னுரிமை தந்து புரட்டாசி யாத்திரை சென்றனர். இதன் பலனாகு அவற்றில் பல கோயில்கள் தற்போது புத்துயிர் பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது. தற்போது 35ம் ஆண்டாக முதல் வார பயணமாக தென்னம்பட்டி ஆதிநாதபெருமாள் கோயிலுக்கும், 2வது வாரத்தில் கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலுக்கும் ஆன்மிக ஸ்தல யாத்திரை சென்றனர். 3வது வாரமாக பாகாநத்தம் துாங்கணம்பட்டி வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சென்றனர். திருஅருள் பேரவை தொண்டர்கள் அங்கு பஜனை, பக்தி இன்னிசை, சொற்பொழிவும், நாமாவளிப் பாராயணம், தியானம், அபிஷேக, ஆராதனை நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. தைப்பூச சீசன் பக்தர்களுக்கு பாத, மருத்துவ, அன்னதான சேவை முகாமை நடத்தி வருவது குறிப்பிடதக்கது. இக்குழுவினரை வாழ்த்த 9003696271 என்ற எண்ணை ‘டயல்’ செய்யலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar