அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் இருந்து 16 புண்ணிய தீர்த்தம்; தீர்த்த யாத்திரை துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2023 10:10
சென்னை; ஸ்ரீ ராமாமிர்த தரங்கினி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, 16 புண்ணிய நதி நீர் கலசம், ராமர் பாதுகை மற்றும் திருவுருவ சிலை அடங்கிய பெட்டக ரத யாத்திரையான அகில பாரத தேச தீர்த்த யாத்திரையை திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் இருந்து உடுப்பி பெஜவார் மாடதிபதி பிரசன்ன தீர்த்த சுவாமிகள் துவக்கி வைத்தார்.
உலகப் புகழ்பெற்ற தெய்வீக நிகழ்வுகளில் ஒரு மைல்கல் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட விருக்கும் ராமர் கோவில், ராமாமிர்த தரங்கிணி அறக்கட்டைளயானது சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமி ஆசியுடன் அகில பாரததேச தீர்த்த யாத்திரை தமிழகத்தில் தன் பயணத்தை துவங்கியது. இதில் பாரதத்தின் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன், ராமபிரான் பாதுகா மற்றும் திருவுருவ சிலையுடன் அமைக்கப்பட்ட புனிதபெட்டகம் சிறப்பு ரதத்தில் தமிழகத்தில் தன் பயணத்தை துவங்கியது. சென்னை, தி நகர். அகில பாரத தேச தீர்த்த யாத்திரையை திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் இருந்து உடுப்பி பெஜவார் மாடதிபதி பிரசன்ன தீர்த்த சுவாமிகள் துவக்கி வைத்தார். விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுத் தலைவர் சேகர் ரெட்டி உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த புனித பெட்டகமானது பாரதத்தின் ஒரு கோடி வீடுகளுக்கு சென்று மக்கள் வழிபாடு செய்த பின் ராமெஜன்ம பூமி குடமுழுக்கின் போது அயோத்தி சென்றடையும்.