வடபழநி ஆண்டவர் சக்தி கொலுவில் அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன்; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2023 10:10
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவில், அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சென்னை; சென்னை , வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, ‘சக்தி கொலு’எனும் பெயரில், கொலு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் 3ம் நாளான நேற்று காலை , மாலையில் சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலுவை தரிசனம் செய்து, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.