Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் முறைப்படி பாலக்காட்டில் ... இன்று ஐப்பசி கார்த்திகை; கந்தனைக் கரம் குவித்து வணங்கினால் கலியின் கொடுமையும், காலபயமும் இல்லை! இன்று ஐப்பசி கார்த்திகை; கந்தனைக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே மேடையில் 1000 பேர் கும்மியாட்டம் ஆடி அசத்தல்
எழுத்தின் அளவு:
ஒரே மேடையில் 1000 பேர் கும்மியாட்டம் ஆடி அசத்தல்

பதிவு செய்த நாள்

29 அக்
2023
11:10

அன்னூர்: அன்னூரில் ஒரே மேடையில் 1000 பேர் கும்மியாட்டம் ஆடி அசத்தினர்.

அன்னூர் வட்டாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கிராமங்களில் வள்ளி கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு அரங்கேற்றம் நடந்து வருகிறது. இதில் வள்ளி முருகன் கலைக்குழு சார்பில், 25வது வெள்ளிவிழா அரங்கேற்றம் அன்னூர் கே.ஜி. மெட்ரிக் பள்ளியில் நேற்று முன் தினம் நடந்தது. அன்னூர், குமாரபாளையம், தாச பாளையம், உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த 1000 பேர் ஒரே நேரத்தில் கைகளை மேலும் கீழுமாக உயர்த்தி கும்மி ஆட்டம் ஆடி அசத்தி, பார்வையாளர்களை வியக்க வைத்தனர். ஆறு வயது சிறுவர், சிறுமியர் முதல் 75 வயது முதியவர் வரை கும்மியாட்டத்தில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் முன்னாள் சர்வதேச இயக்குனர் ராமசாமி தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். தமிழாசிரியை சாந்தாமணி பேசுகையில்," கும்மியாட்டத்தால் மனநலம் உடல்நலம் மேம்படும். நம்முடைய கலாச்சாரம் மீண்டும் தழைத்தோங்கும்," என்றார். பயிற்சி ஆசிரியர் பழனிச்சாமி, இணையாசிரியர் ரங்கநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் வள்ளி முருகன் வேடம் அணிந்து நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இரவு 7:00 மணிக்கு துவங்கி 10:00 மணி வரை மூன்று மணி நேரம் கும்மியாட்டம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar