Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை மக்களின் ... உலக நலன் வேண்டி ராம நாம தாரக ஜப யக்ஞம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சுழி அருகே 10ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம், கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2023
10:11

திருச்சுழி: திருச்சுழி அருகே 10 ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம், கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி அருகே உலக்குடியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத் தொல்லியல் கள ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தனர். அங்கு பாண்டியர்கள் கால சிற்பங்களை கண்டறிந்தனர். அவர்கள் கூறியதாவது : உலக்குடியில் வடக்கு திசையில் விவசாய நிலத்தின் ஓரமாக புதர்களில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கம் சதுர வடிவ ஆவுடையுடன் செதுக்கப்பட்டுள்ளது. ஆவுடையானது இரண்டாக உடைந்துள்ளது. இது 10 ம் நூற்றாண்டில் இருந்த முற்காலபாண்டியர் காலத்தை சேர்ந்தது. சிவலிங்கம் அருகே கொற்றவை சிற்பம் உள்ளது. இது முற்றுப்பெறாத சிற்பம். தலைப்பகுதி கரண்ட மகுடமும் காதுகளில் காதணியும் உள்ளது. வலது கை கத்தியை பிடித்த படியும், இடது கையை கீழே தொங்கவிட்டும் அந்த கரத்தில் தெளிவற்ற ஒரு ஆயுதம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளது. சிற்பம் 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் புடைப்புச் சிற்பமாக உள்ளது. இவற்றின் காலமும் சிவலிங்கத்தின் காலமும் ஒன்றாக கருதலாம். உலக்குடி பஸ் ஸ்டாப் அருகே பிற்கால பாண்டிய காலத்தில் சேர்ந்த விஷ்ணு சிற்பம் நின்ற கோலத்தில் உள்ளது. இது 4 அடி உயரத்தில் உள்ளது. 4 கரங்களுடன் வலது மேற்கரத்தில் சக்கரம் இடது மேற்கரத்தில் சங்கும் உள்ளது. வலது முன் கரத்தில் அபயம் காட்டியும், இடது முன்கரம் கடி ஹஸ்தமாகவும் வைத்து நின்ற கோலத்தில் உள்ளது. தலையில் கிரீட மகுடமும் மார்பில் முப்புரி நூலும் இடையில் இடைக்கச்சையுடன் உள்ளது. இது போன்ற சிற்பங்கள் இங்கே தொடர்ந்து கிடைப்பதால் ஒரு சிவன் கோவில் இருந்து அழிந்து இருக்கக் கூடும் என கருதலாம்" என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்; ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். பெண்களின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ... மேலும்
 
temple news
ஹோலி என்றால், மனதில் உள்ள பொறாமை, தீய எண்ணம், அகங்காரம் அனைத்தையும் சுட்டெரித்து அறிவுச்சுடரை ஏற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடை உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar