தென்தாமரைகுளம்; கொட்டாரம் அடுத்த வடுகன்பற்று ஊரில் அமைந்துள்ள, அகஸ்தீஸ்வரர் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் இதுவரை உற்சவர் சிலை இல்லாமல் இருந்து வந்தது. அறங்காவலராக இருந்து வந்த வேலையா நாடாரின் நினைவாக அவரது மகனும், காங்., மாநில செயலாளருமான வக்கீல் சீனிவாசன் 67 கிலோ எடையில் உற்சவர் ஐம்பொன் சிலையை கொடையாக வழங்கினார்.