Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆகாய தீபம் ... ராஜ அலங்காரத்தில் விநாயகர்; தடத்துப் பிள்ளையார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு ராஜ அலங்காரத்தில் விநாயகர்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாத்துக்குடி சிவன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா; 18ம் தேதி சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
துாத்துக்குடி சிவன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா; 18ம் தேதி சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

14 நவ
2023
01:11

துாத்துக்குடி: துாத்துக்குடி சிவன் கோயிலில், கந்தசஷ்டி திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. வரும் 18ம் தேதி சூரசம்ஹாரம், 19ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. துாத்துக்குடி, பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில், சுப்பிரமணியசுவாமி மகமை பரிபாலன சங்கம் சார்பில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. 129ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா காப்புகட்டுதல் நேற்று முன்தினம் நடந்தது. சிவன் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமிக்கு காலையில் கும்பஜெபம், பல்வேறு வகையான அபிஷேகம், கும்பாபிஷேகம், யாகசாலை பூஜை. பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மூலம் நடந்தது. இரவு சுப்பரமணியசுவாமி ரதவீதி உலா வருதல் நடந்தது. விழாவை ஒட்டி, ஒவ்வொரு நாளும் இது போன்ற சிறப்பு பூஜைகள், ரதவீதி உலா வருதல் நடக்கிறது, விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சூரசம்ஹார விழா வரும் 18ம் தேதி நடக்கிறது. 19ம் தேதி சுப்பிரமணியசுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. 22ம் தேதி கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை சுப்பிரமணியசுவாமி பரிபாலன சங்கம், அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் பி.எஸ்.கே. ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி, நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம், : எத்தனையோ அழிவு முயற்சிகள் நடந்தாலும் இன்றும் சனாதன வைதீக தர்மம் நிலைத்து நிற்பதற்கு ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில், பாகம்பிரியாள் உடனுறை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மனின் ஜென்ம தினத்தையொட்டி, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைந்துள்ள சிவகாமி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar